'துலா லக்னத்திற்கு', செவ்வாய் பகவான் 'இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு' அதிபதியாகிறார்.
அதுபோல, 'மகர லக்னத்திற்கு', சுகம் மற்றும் லாபஸ்தானத்திற்கு அதிபதியாகிறார்.
இவ்வாறு, இந்த இரண்டு லக்னங்களுக்கும், செவ்வாய் பகவான்... குடும்பம், சுகம், களத்திரம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியாகி 'சுப பலன்களை அளிப்பது' மிகவும் முக்கியாமாகக் கவனிக்கப் பட வேண்டிய அம்சம்.
ஆனால், இவ்விரண்டு லக்னங்களுக்கும் இதே 'செவ்வாய் பகவான்' மாராகாதிபதியாகவும்... பாதாகாதிபதியாகவும் அமைந்து 'அசுப பலன்களை அளிப்பது' என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு, செவ்வாய் பகவானின் 'சுப ஆதிபத்திய பலன்களையும்'... 'பாதக மற்றும் மாரக ஆதிபத்திய பலன்களையும்'... அளிப்பது, அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ புண்ணிய கர்ம-வினைகளின் விளைவுகளைப்' பொருத்ததே.
இந்த இரண்டு லக்னங்களுக்கும், மாரகம் மற்றும் பாதகம் விளைவிக்கும், 'செவ்வாய் பகவானின்' அமைவை 'விருச்சிக இராசியும்'... 'மேஷ இராசியும்'... பங்கிட்டுக் கொள்கின்றன.
இந்த விருச்சிக, மேஷ இராசிகளில்... செவ்வாய் பகவான்.
# 'குரு பகவானின்' சாரமான... விசாக நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தையும்...
# 'சனி பகவானின்' சாரமான... அனுஷ நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...
# 'புத பகவானின்' சாரமான... கேட்டை நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...
# 'கேது பகவானின்' சாரமான... அசுவனி நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...
# 'சுக்கிர பகவானின்' சாரமான... பரணி நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...
# 'சூரிய பகவானின்' சாரமான... கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தையும்...
... கடந்து போகிறார்...
இதில் 'செவ்வாய் பகவான்'...
* துலாம் மற்றும் மகர லக்னாதிபதிகளான 'சுக்கிர பகவான்' மற்றும் 'சனி பகவானுக்கு'... 'யோகாதிபதிகளான' சுக்கிரன், புதன் மற்றும் சனி பகவான்களின் சாரம் பெற்ற நட்சத்திரங்களின் வழியே பயணம் செய்கிறார்.
* நிழல் கிரகமான... கேது பகவானின் சாரத்தில் பயணம் செய்கிறார்.
* 'மறைவு ஸ்தானங்களுக்கு' அதிபதியாகும்... குரு பகவானின் சாரத்தில் பயணம் செய்கிறார்.
* 'மறைவு மற்றும் பாதகத்திற்கு' அதிபதியாகும் 'சூரிய பகவானின்' சாரத்தில் பயணம் செய்கிறார்.
இந்த அமைவுகள் எலாம் வெளிப்படுத்தும் ஒரு உண்மை... அந்தந்த ஜீவனின் கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்தும் வண்ணம்தான்... செவ்வாய் பகவானின் அமைவு இராசியிலும்... அவர் பெறும் சாரத்தின் வழியே அம்ஸத்திலும் அமையப் பெறும் என்பதுதான்.
'சூரிய பகவானுக்கு' அடுத்ததாக ஆற்றலையும்... சக்தியையும்... ஆத்ம சாரத்தையும்... வெளிப்படுத்தும், 'செவ்வாய் பகவானை' ஆய்ந்து கணிப்பதே உத்தமம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment