Monday, December 9, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 56. "கேந்திர ஸ்தானங்கள்- 'ஸ்திர லக்னத்தை' மூலமாகக் கொண்டு" ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-12.





கேந்திர ஸ்தானங்கள்... ஸ்திர லக்னத்தாருக்கு (ரிஷபம்-கடகம்-துலாம்-மகரம்) அளிக்கும் பூர்வ வினைகளின் விளைவுகளை... உதாரணத்தோடு அணுகிப் பார்ப்போம்...

உதாரணம் - 2

'கடக லக்னதத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...

- லக்ன கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவான்' - 'கடக இராசியில்'... புனர் பூசம் 4 ஆம் பாதத்திலும்...

- 4 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' - துலா இராசியில்... சுவாதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்...

- 7 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சனி பகவான்' - மகர இராசியில்... திருவோன நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்...

- தசம கேந்திராதிபதியாகிய ... 'செவ்வாய் பகவான்' - மேஷ இராசியில்... கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.

# இந்த ஜாதகருக்கு லக்ன கேந்திராத்பதியாகிய 'சந்திர பகவான்' லக்ன கேந்திரத்திலேயே அமைகிறார். இவர் லக்னாதிபதியுமாகிறார். தனது 7 ஆம் பார்வையாக... 'களத்திர பாவம்' என்ற 7 ஆம் கேந்திரத்தையும்... அங்கிருக்கும் கேதிராதிபதியாகிய 'சனி பகவானையும்' பார்வை செய்கிறார்.

# சுக கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவான்' சுக ஸ்தானத்தில் பலம் பெற்று அமைகிறார். இவர் தசம கேந்திரத்தையும்... அங்கிருக்கும் 'செவ்வாய் பகவானையும்' பார்வை செய்கிறார்.

# களத்திர கேந்திராதிபதியாகிய 'சனி பகவான்' களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து... தனது 3 ஆம் பார்வையாக... சுக-விரய-சயன் ஸ்தானத்தையும், தனது 7 அம் பார்வையாக... லக்ன கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானையும்', தனது 10 ஆம் பார்வையாக... சுக கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார்.

# தசம கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' தசம கேந்திரத்திலேயே அமர்ந்து... தனது 4 ஆம் பார்வையாக லக்ன கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானையும்', தனது 7 ஆம் பார்வையாக... சுக கேந்திரத்தையும், கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானையும்'. தனது 8 ஆம் பார்வையாக... பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்... பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...

லக்ன கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானின்' அமைவினால்...

* அழகான ரூபத்தையும்... அனைவரையும் ஈர்க்கும் உடல் வாகையையும் பெற்றிருப்பார்.
* நல்ல எண்ணங்களையும்... அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும், கடமை உணர்வோடும் வெளிப்படுத்துவராகவும் இருப்பார்.( செவ்வாய் பகவானின் பார்வையையும்... சனி பகவானின் பார்வையையும் பெறுவதால்...)

சுக கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானின்' அமைவினால்...

* நிறைந்த சுகத்தை அனுபவிப்பராக இருப்பார்.
* தனது மனதுக் கேற்ற சுக வாழ்வை வாழ்பவராகவும்... அதை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அமைத்துக் கொடுப்பவராகவும் இருப்பார். ( சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடமைகளிலிருந்து தவறாதவராகவும்... தனது கடமைகளை மிக நேர்த்தியாகவும், அழகுணர்வோடும்... அணுகுபவராக இருப்பார். (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* விடு-வாகனம்-விளை நிலங்கள்- கால்நடைகள்... என விருத்தியாம்சமான வாழ்வை வாழ்பவராக இருப்பார்.

களத்திர கேந்திராதிபதியாகிய 'சனி பகவானின்' அமைவினால்...

* நேர்மையான... தர்மத்துடன் கூடிய நட்பும், துணையும் அமையப் பெற்றவராக இருப்பார்.
* நட்புக்கும்... துணைக்கும் அவர்களுக்கான பூரண சுதந்திரத்தையும்... அதில் அவர்களுக்குத் தனது உதவி தேவைப்படும் நேரத்தில்... தக்க உதவியை வழங்கிடும் குணாதிசியத்தைப் பெற்றவராக இருப்பார். ( சந்திர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* மன்னருக்கு மந்திரி போல்... மதியூகம் மிக்க துணை அமையும் வாய்ப்பை பெற்றிருப்பார்.

தசம கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' அமைவினால்...

* கடமை தவறாத... கண்ணியம் மிக்க... வீரனாக செயல்படுவார்.
* செய்யும் செயல்களில் நேர்த்தியும்... அழகுணர்ச்சியும்... தனித்தன்மையும்... நிரம்பப் பெற்றவராக இருப்பார். ( செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* நிர்வாக ஒழுங்கு... இவர் ஸ்தானம் வகிக்கும் ஒவ்வொரு துறையிலும் பளிச்சிடும் வண்ணமாக இவரது செயல்கள் அமையும்.
* தனது கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவராக இருப்பார்.

இதுவரை... லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம் என்ற கேந்திர ஸ்தானங்கள் வழியாக 'கர்ம வினைகள் என்ற பூர்வ புண்ணிய வினைகள்'  ஸ்திர லக்ன ஜாதகர்களுக்கு செயல்படுகிறது....? என்பதைப் பார்த்தோம்.

இனிவரும் பகுதியில்... உபய லக்னத்தாருக்கு... பூர்வ வினைகளின் வெளிப்பாட்டை... இந்த கேந்திர ஸ்தானங்கள் எவ்வாறு... வெளிப்படுத்துகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...