Saturday, November 23, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 44. 'கேது பகவான் வெளிப்படுத்தும் கர்ம வினைப் பலன்கள்' - பகுதி 7.






'கேது பகவானின்' அமைவு உணர்த்தும் கர்ம வினைப் பலன் :

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு கீழ்கண்டவாறு கிரக நிலைகள் அமைந்திருப்பதாகக் கொள்வோம்...

- 3 ஆமிடத்தில் 'புத பகவான்'... பூசம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'கேது பகவான்'... மகம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'சுக்கிர பகவான்'... மகம் நட்சத்திரத்தில்...

- 6 ஆமிடத்தில் 'சனி பகவான்' ... சுவாதி நட்சத்திரத்தில்...

- 7 ஆமிடத்தில் 'சந்திர பகவான்' ... அனுஷ நட்சத்திரத்தில்...

- 10 ஆமிடத்தில் 'ராகு பகவான்'... பூரட்டாதி நட்சத்திரத்தில்...

இந்த ஜாதகருக்கு... ஜனன காலத்தில் 'சனி பகவானது தசா' ஏறத்தாள 14 வருடங்கள் எனக் கொண்டால், 'புதன் பகவானது' தசாவை (17 வருடங்கள்) தனது 31 வயதில் கடந்திருப்பார். இவருக்கு 'கேது பகவானது' தசா (7வருடங்கள்)... 31 ஆவது வயதிலிருந்து - 38 வயது வரை கடக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

'கேது பகவான்' ஒருவரை தனது 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளிலிருந்து' விடுவித்து... ஜீவ வாழ்வின் நோக்கத்தைப் புரிய வைத்து... அவரை உலக வாழ்வின்... பந்தங்களிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் விடுவித்துவிடுவார்.

இந்த ஜாதகருக்கு, அந்த வாய்ப்பை தக்கத் தருணத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...'கேது பகவானின்' அமைவு.

இவரது முந்தைய பிறவிகளில்...

- இவர்,  கடும் துன்பத்தை அனுபவிக்கும் குடும்ப சூழலில் பிறந்திருப்பார். அதனால்... சுக-போகங்களுக்கு ஏங்கிய வாழ்வை வாழ்ந்திருப்பார். அதை, 3 ஆமிடத்தில் அமைந்த 'புத பகவானும்'... 4 ஆமிடத்தில் அமைந்த 'சுக்கிர - கேது பகவான்களும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- பிறந்த சூழலில் தான் அனுபவிக்க முடியாத சுக போகங்களை... வெளி சூழல்களில் முறையற்ற வழியில் அனுபவித்திருப்பார். இதை 6 ஆமிடத்தில் அமைந்த 'சனி பகவானும்'... 7 ஆமிடத்தில் அமைந்திருக்கிற 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- எவ்வளவு அனுபவித்தாலும் போதாது... போதாது... என்ற நிலையில்... தனது சுகத்துக்காக எந்தந்த வழிகளெல்லாம் கிடைக்கிறதோ... அந்தந்த வழிகளில்... தர்ம - நியாயம் சீர் தூக்கிப் பாராமல்... தனது சுகம் மட்டுமே முக்கியம் என்ற நிலையில் வாழ்ந்தவராக இருப்பார். இதை 3 ஆமிடத்தில் அமைந்த 'புத பகவானும்'... 10 ஆமிடத்தில் அமைந்த 'ராகு பகவானும்'... 7 அமிடத்தில் அமைந்த 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி அமைவதைப் போல... ஒவ்வொரு செயலின் விளைவுக்கும், அது நன்மையென்றாலும்... தீமையென்றாலும்... அதற்கும் பிறவி உண்டு.

ஜாதகர்... தனது இந்தப் பிறவியில்... சென்ற, பூர்வ புண்ணிய - கர்ம வினைகளின் விளைவுகளை... ஜனன காலம் முதல்... தனது 31 ஆவது வயது வரை... தொடர்ந்திருப்பார்.

-  முதல் 14 வயது வரை நடந்த 'சனி பகவானின்' தசாவும்...

- 31 வயது வரை நடந்த 'புத பகவானின்' தசாவும்... இதனை சுட்டிக் காட்டுகின்றன.

- 31 ஆவது வயதில் ஆரம்பித்த 'கேது பகவானின்' தசாக் காலமான 7 வருடங்கள்... இவரது வாழ்வின் பாதையை 'திருப்பி விடும் வண்ணமாக' அமைந்திருப்பதை... அவரது அமைவு சுட்டிக் காட்டுகின்றது.

... சுக ஸ்தானத்தில்... லக்னாதிபதியுடன் இணைந்து மட்டுமல்ல... அவரை தனது நட்சத்திரத்திலும் இயக்கி... இதுவரை தான் அனுபவித்த வந்த ஒவ்வொரு சுச்கத்திற்கும் தடையை ஏற்படுத்துவார்.

... இதுவரை தான் விரும்பியவாறெல்லாம் வாழ்ந்த ஜாதகரின் மனதில்... ஒரு வெறுமையை உண்டாக்குவார். அந்த வெறுமையில் தோன்றும் விரக்தி... இவரின் வாழ்வை மாற்றும்.

... சுக-போகங்கள் மட்டும் வாழ்வு அல்ல... வாழ்வின் நோக்கம்... கடமைகளைக் கடந்து போவதுதான்... என்ற ஞானம் உருவாகும். அந்த ஞானத்தை 'லக்னாதிபதிக்கு' (சுக்கிர பகவான்) அளித்து... இதுவரை மனம் போன போக்கில் பயணித்த அவரின் வாழ்வு... இலக்கை நோக்கி பயணிக்கும்.

38 ஆவது வயதில் இருந்து 58 ஆவது வரையில், நடக்கப் போகும் 'சுக்கிர பகவானின்'(20வருடங்கள்) தசாக் காலத்தில்... சுக - போக வாழ்வை விடுத்து... கடமைகளைச் செவ்வனே செய்யும் பாதைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்... 'கேது பகவான்'.

உலக வாழ்வில் இருந்து... உள் வாழ்வுக்குத் திருப்பும், இந்த அற்புத மாற்றத்தைத்தான்... 'கேது பகவான்' நிகழ்த்துகிறார்.

அதற்காகத்தான்... 'மோக்ஷக்காரகன்' என்ற நாமத்தையும் சுமக்கிறார்.

இதுவரையில்... 'ராகு - கேது பகவான்களைப் பற்றிய சூட்சும ஆய்வின்'... ஒரு சிறு பகுதியில் பிரவேசம் செய்வதற்கு அருளிய... ஸ்ரீ துர்க்கை அன்னையின் திருவடிகளுக்கும்... மஹா கணபதி நாதரின் திருவடிகளுக்கும்... எளியேனின் பணிவான வணக்கங்கள்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...