Saturday, November 23, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 42. 'ராகு - கேது பகவான்களின அமைவு' - பகுதி 5.






'ராகு பகவான்' ஒரு ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' சுட்டிக்காட்டுகிறது... என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

கர்ம வினைகளின் தொகுப்பில்... புண்ணிய வினைகளும் - பாப வினைகளும் நிறைந்திருக்கும். அதற்கேட்ப இன்பத்தையும் - துன்பத்தையும் ஜீவர்கள், தமது பிறவிகளில் அனுபவிக்கிறார்கள்.

அதில்... ஒரு பிறவியை அடையும் ஜீவனுக்கு. அதன் 'மொத்தக் கர்ம வினைத் தொகுப்பிலிருந்து' (சஞ்சித கர்மா) இந்தப் பிறவிக்கான பூர்வ புண்ணியத்தை (பிராரப்தக் கர்மா)... 'புண்ணியமும் - பாபமும்', சரி-சமமாகக் கலந்த கலவையாக அளிக்கிறார்... இறைவன். அதனால்தான் ஒரு ஜீவன், அதன் வாழ்வில் இன்பத்தையும் - துன்பத்தையும்... மாறி, மாறி அனுபவித்து வருகிறது. அந்த 'பிராரப்த கர்மாவைத்தான்' ஒரு ஜாதகத்தில் 'ராகு பகவான்' பிரதிபலிக்கிறார்.

ஆதால்தான்... 'ராகு பகவானைப் போல் கொடுப்பார் இல்லை...!' என்ற பதம் உருவானது.

'கேது பகவான்'... இந்த வினைத் தொகுப்பிலிருந்து... இந்த ஜீவனை எவ்வாறு விடுவித்துக் கொள்வது...? என்ற நுட்பத்தை அளிக்கிறார்.  அதாவது 'பூர்வ வினைகளைக்' களைந்து போகச் செய்கிறார். ஆதலால்தான்... 'கேது பகவானைப் போல் கெடுப்பார் இல்லை...!' என்ற பதம் உருவானது.

'சுவர்பாணு' என்ற அசுரன் அருந்திய அமிர்தத்திலிர்ந்து சாகாவரம் பெற்றதனால்... 'அசுர குணமும், தேவ குணமும்' நிறைந்திருக்கும் வடிவமாக 'ராகு-கேது பகவான்கள்' அமைகிறார்கள். இதில் 'ராகு பகவான்' அசுர குணத்தையும்... கேது பகவான்' தேவ குணத்தையும் பிரதிபலிக்கிறார்கள்.

இதில் 'அசுர குணம்' என்பது 'உலக சுகத்தில் மூழ்கித் திளைப்பதைக்' குறிக்கிறது. அதானால்தான்... 'ராகு பகவானை போகக்காரகன்...' என்று கூறுகிறோம்.

'தேவ குணம்' என்பது உலக சுகத்திலிருந்து மீண்டு... உள் வாழ்வு என்ற இறைவனை நோக்கிய வாழ்வு என்பதைக் குறிக்கிறது. அதனால்தான்... 'கேது பகவானை மோக்ஷக்காரகன்...' என்று கூறுகிறோம்.

'சூரிய - சந்திர பகவான்களை' நீக்கி... எஞ்சிய கிரகங்களில்... புதன் - சுக்கிரன் - சனி பகவான்களை... ஜீவனின் உலக வாழ்வில் பங்குபெறும் கிரகங்களாகக் கொண்டால்... இந்த கிரகங்களுடன் இணைந்து பார்க்கப்படுவர்... 'ராகு பகவான்'.

'குரு பகவான், செவ்வாய் பகவான்'... இருவரும், ஒரு ஜீவனின் உள் வாழ்வுப் பயணத்திற்கு வழிகாட்டும் கிரகங்களாக பார்க்கப்படுவதால்... 'கேது பகவான்'... இந்தக் கிரகங்களுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறர்.

இவர்களின் அமைவு... ஒரு ஜாதகரின் வாழ்வை எவ்வாறு மாற்றி அமைக்கிறது...? என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...