'யோகங்கள்'... ஜோதிடக்கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்...மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.
இந்த யோகங்களின் அமைவு... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.... இறைவனின் அருளோடு...
'பரிவர்த்தனை யோகம்'
ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஸ்தானங்கள் இருக்கின்றன. அந்தந்த 'ஸ்தானங்கள்' அந்தந்தக் கிரகத்திற்கு 'ஆட்சி வீடுகளாகிறது'. இரண்டு 'ஆட்சி வீட்டுக் கிரகங்கள்' தமது வீடுகளுக்குள்... ஒன்றுக்கொன்று மாறி அமர்ந்து கொள்வதை...'பரிவர்த்தனை' என்றும்...அந்த அமைவை... 'பரிவர்த்தனை யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிடம்.
இந்த யோகம் அளிக்கும் பலன்கள்... 'பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் ஆதிபத்தியங்களைப் பொருத்தும்'... 'ஜாதகரின் பூர்வ வினைகளின் விளைவுகளைப் பொருத்தும் அமையும்'.
உதாரணமாக... 'மேஷ லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு... லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' 9 ஆம் இடமான 'பாக்கிய ஸ்தானத்தில்' அமைந்தும், அந்த பாக்கியாதிபதியாகிய 'குரு பகவான்' லக்னத்தில் அமைந்தும்... ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை பெற்று அமைந்திருக்கிறார்கள். இந்தப் பரிவர்த்தனையில் ஜாதகர்... பிறக்கும் போதே, அனைத்து பாக்கிய சூழல்களுடன் பிறந்திருப்பார். மேலும் தனது தந்தையைப் போலவே... இவரும் தனது குடும்பத்திற்கு அனைத்து பாக்கியங்களையும் அளிக்கக் கூடியவராக இருப்பார். குடும்பத்தால் இவருக்கும்... இவரால் குடும்பத்திற்கும் பெருமையும்... புகழும் வந்து சேரும். இவர் எதிர்கொள்ளும் மற்றும் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் தர்மத்திற்கும், நியாயத்திற்கும் உட்பட்டே இருக்கும்.
அதுவே... ஒரு ஜாதகர், 'விருச்சிக லக்னத்தில்' பிறப்பதாகக் கொள்வோம். அந்த லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' 9 ஆம் இடமான 'பாக்கிய ஸ்தானத்தில்' அமைந்தும், அந்த பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவான்' லக்னத்தில் அமைந்தும்... ஒருவருக்கு ஒருவர் 'பரிவர்த்தனை' பெறுகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களுக்கும் சிறந்த ஆதிபத்தியங்கள் அமைகிறது... ஒன்று 'லக்னாதிபதி' மற்றொன்று 'பாக்கியாதிபதி'. ஆனால் இந்தப் பரிவர்த்தனையில் இந்த இரண்டு கிரகங்களும்... தங்களது பலத்தை இழக்கின்றன. ஏனெனில்... 'விருச்சிக லக்னம்'... 'சந்திர பகவானுக்கு 'நீச நிலையை' அளிக்கிறது. அது போல, லக்னத்திற்கு 'பாக்கிய ஸ்தானமான'... 'கடகம்', செவ்வாய் பகவானுக்கு 'நீச நிலையை' அளிக்கிறது. இவ்வாறு, லக்னாதிபதியும்... பாக்கியாதிபதியும், ஒருவருக்கு ஒருவர் தங்களது பலத்தை இழக்கிறார்கள். இதனால், ஜாதகர் பிறக்கும் போது சுக சௌகரியங்களை அனுபவிக்க முடியாமலும்... தான் முயன்று தனது வாழ்வையும், தன் குடும்பத்தையும் வழி நடத்தும் கடமைகளை ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாவதால்... தான் அனுபவிக்க வேண்டிய பாக்கியங்களை... தக்க காலங்களில் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படும்.
இதைப் போலவே... ஏனைய யோகங்களையும்... ஆய்வுக்கு உட்படுத்துவோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்

No comments:
Post a Comment