Sunday, November 10, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 33. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'குரு-சந்திர யோகம்'




'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.இறைவனின் அருளோடு...


'குரு-சந்திர யோகம்' :

இந்த யோகத்தை... 'குரு சந்திர யோகம்' என்றும், 'கஜ கேசரி யோகம்' என்றும் குறிப்பிடும் வழக்கம் ஜோதிடக் கலையில் உள்ளது.

பொதுவாக... 'சந்திர பகவானுக்குக்' கேந்திரங்களில் ( லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவன்ம என்ற 1-4-7-10) 'குரு பகவான்' அமைவதைக் குறிப்பிட்டாலும்...

'சந்திர பகவானுடன், குரு பகவான்' இணையும் போதும், 'சந்திர பகவானுக்கு' நேரெதிரில்... சம-சப்தம ஸ்தானத்தில் அமையும் போதும்... இந்த யோகத்தின் அமைவு பூரணம் பெறுவதை... அனுபவத்தில் உணரலாம்.

கர்ம வினைகள் என்ற பூர்வ வினைகள், எண்ணங்களாக உற்பத்தியாவது... மனத்தில்தான். இந்த பூர்வ வினைகளுக்கு ஏற்ப, உருவாகும் எண்ணங்களைத்தான்...'சந்திர பகவான்' பிரதிபலிக்கிறார். அதனால்தான் இவரை 'மனோகாரகன்' என்று அழைக்கிறோம்.

பூர்வ வினைகள் உருவாக்கும் எண்ணங்களை... அதனதன் தகுதிக்கேற்ப... தக்க 'ஞானத்துடன்' அணுகும் பக்குவத்தை அளிக்கும் பணியைத்தான்... 'குரு பகவான்' அருள்கிறார். அதனால்தான் இவரை 'ஞானக்காரகன்' என்று அழைக்கிறோம்.

இந்த 'மனோகாரகனும் - ஞானக்காரகனும்' இணையும் போது... அந்த ஜாதகர். தனது வாழ்வில்... 'விளையும் அல்லது எதிர்கொள்ளும்' வினைகளை ஞானத்துடன் அணுகுவார். அதனால்... அந்த வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளான இன்ப - துன்பங்களால்... இவர் பாதிக்கப்படுவதில்லை. எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை இவர் அடைவார்.

இந்த அமைவு ஏற்படும் ஸ்தானங்களைப் பொருத்து... அவை விளைவிக்கும் கர்ம வினைகளின் விளவிகளுக்கேற்ப... இந்த யோகத்தின் பலனை... ஜாதகர்கள் அனுபவிப்பர்.

உதாரணமாக, 'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 'குரு-சந்திர பகவான்களின் இணைவு'... 5 ஆமிடமான, 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமைவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஜாதகர், வழி வழியாக தளைத்தோங்கும் குடும்பத்தில் பிறந்தவராகவும்... நிறைவான குடும்பத்தில், வசதியான, சுகமான வாழ்வை அனுபவிப்பராகவும்... எந்த செயல்களையும் தர்மத்துடன் அணுகுபவராகவும்... 'தொட்டதெல்லாம் துலங்கும்' என்ற நிலையில் வாழ்பவராகவும் இருப்பார்.

அதுவே... 'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... இந்த இணைவு... 6 ஆமிடமான 'ருண-ரோக-சத்ரு ஸ்தானத்தில்' அமைவதாகக் கொள்வோம். இந்த ஜாதகர், தனது 'எதிர் வினைகளின்' விளைவுகளால்... மேற்சொன்ன அனைத்து 'பாக்கியங்களையும்'  இழப்பது மட்டுமல்ல... தான் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் வினைகளின் விளவுகளால்... தனது பூர்வீகச் சொத்துக்களை இழப்பதும்... பூர்வீகத்தை விட்டு விலகிச் செல்வதும்... மறைந்து வாழும்... துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப் படுவதுமாக இருப்பார். ஆனால்... ஒரு நிலையிலும் நேர்மை தவறாமல் இருப்பார். அந்த நேர்மைக்கும் தர்மத்துக்காகவும்தான்... தன்னுடையது அனைத்தையும் இழந்தாலும்... தர்மம் வழுவாது வாழ்வார். 'கெட்டாலும் மேன்மக்கள்... மேன்மக்களே...!' என்ற சொல்லுக்கு ஏற்றற்போல் இவர்கள் வாழ்வு அமையும்.

இதைப் போல... ஏனைய யோகங்களையும் ஆய்வதற்கு முற்படுவோம். ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...