திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 5.
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு' ... ( அதிகாரம்: நிலையாமை, குறள்-339)
இந்த குறளுக்கான பொதுவான விளக்கமாக... 'இறப்பு உறக்கத்தைப் போன்றது, பிறப்பு உறக்கம் நீங்கி விழித்தலைப் போன்றது...' என்பதாக அமையும்.
அது உண்மைதான். ஆனால் இந்த இரண்டு வரிகளுக்குள் எப்போதும் போல இந்த 'வார்த்தைச் சித்தர்' ஏழ் கடலுக்கும் ஒப்பான கருத்தியல்களை பொதித்து வைத்திருப்பார் என்பதுதான் ஆழ்ந்து அறிய வேண்டிய ஞானமாக மலர்கிறது.
ஒரு ஜீவ வாழ்வின் சரி பாதிக் காலங்கள் தூக்கத்தில் கடந்து போகிறது. உறக்கம் என்பது உண்மையில் ஒரு வரம். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறைவன் கொடுத்திருக்கும் கொடைதான் உறக்கம்.
இந்த உறக்கத்தில் உண்மையில் என்னதான் நிகழ்கிறது...?
பரமாத்ம சொரூபம் ஒரு ஜீவனின் பிறவிக்காக... அந்த ஜீவனின் மூலமான 'ஆத்மாவாகவும்'... அந்த 'ஆத்மாவை' உற்பத்தி ஸ்தானமாகக் கொண்டு 'ஜீவனும்'... அந்த ஜீவனை மூலமாகக் கொண்டு மனமும்... அந்த மனத்தை மூலமாகக் கொண்டு, அதன் வழியாக வெளிப்படும் அதன் 'கர்ம வினைகளை' அனுபவிக்கும் உடலும் திகழ்கிறது.
அந்த உடல்... தனது வினைகளை... கடலின் தொடர் அலைகளைப் போல தொடர்ந்து அனுபவித்துக் களைத்துப் போகும் போது, அதனை ஆசுவாசப்படுத்த... அந்த பரமாத்ம சொரூபம்... அந்த ஜீவனை ஒவ்வொரு நாளின் இறுதியிலும்... தனது 'ஆத்ம' சொரூபத்தில் இணைத்துக் கொள்கிறது.
அந்த ஜீவன் தனது வினைகளுக்கிடையேயான... ஒரு சில நொடிகளின் இடைவெளியில்... திகைத்து நிற்கும் வேளையை சாதகமாக்கிக் கொண்டு... அந்த ஜீவனை, தனக்குள் ஈர்த்து அணைத்துக் கொள்கிறது... கருணை கொண்டு நம்மோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் 'சாட்சியான' ஆத்மா. இந்த நிகழ்வுக்குத்தான்... 'உறக்கம்' என்று பெயர். 'எல்லாத் துன்பத்திற்கும் ஒரு விடிவு' உறக்கம்தான்.
அந்த அற்புத நிகழ்வுதான் இந்த ஜீவனின் வாழ்வின் இறுதியில் நிகழ வேண்டிய நிகழ்வு. இதுதான் ஜீவ வாழ்வின் நோக்கம். இதுதான் 'பேரின்பம்'. அதனால்தான், 'தூக்கத்தின் விழிப்பு' நமக்கு துன்பமாகவும்... 'ஆழ்ந்த உறக்கத்தின் அனுபவம்' நமக்கு பேரின்பமாகவும் அமைகிறது.
ஆனால்... ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இந்த பேரின்பத்தை அனுபவிக்கும் ஜீவன், மீண்டும் அடுத்த நாளில் அதனின்று வெளிப்பட்டு,,, மீண்டும் தனது 'கர்ம வினைகளை' தொடர்கிறது. இவ்வாறு... ஒவ்வொரு பிறவியிலும், தனது மூலமான... தோன்றாத நிலையில் இருக்கும் ஆத்ம பந்தத்தில் திளைக்கும் உபாயத்தை அறியாமல்... மீண்டும், மீண்டும் தொடர் பிறவிகளில் சிக்கித் தவிக்கும் ஜீவனின் நிலையைத்தான்... இந்தக் குறளில் பதிவு செய்கிறார்... இந்த 'வார்த்தைச் சித்தர்'.
ஒவ்வொரு பிறவியின் மறைவும்... மிண்டும் அடுத்த பிறவியின் பிறப்பும்தான் இந்த ஜீவனின் நீக்க முடியாத துன்பம். இந்தப் பிறவித் தொடரின் மூலம்தான், அந்த ஜீவன் சேர்த்து வைத்துள்ள 'கர்ம வினைகள்'. அதுதான், தொடர் பிறவிகளுக்குக் காரணமாகிறது.
இந்த தொடர் பிறவிகளை நிறுத்தவதன் சூட்சுமம்... அந்த ஜீவனின் 'உறக்கத்தில்தான்' இருக்கிறது. அந்த உறக்கம்... அந்த ஜீவனை, அதன் ஆத்மா சங்கமத்தில் கலக்க வைப்பதாக இருக்க வேண்டும். மீண்டும் அதனின்று பிரிந்து... ஒரு பிறப்பாக அமைந்து விடக் கூடாது... என்பதை வலியுறுத்தும் 'குறளாக' அமைவதுதான் இதன் சிறப்பும்... சூட்சுமமும்.
ஸாய்ராம்.
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு' ... ( அதிகாரம்: நிலையாமை, குறள்-339)
இந்த குறளுக்கான பொதுவான விளக்கமாக... 'இறப்பு உறக்கத்தைப் போன்றது, பிறப்பு உறக்கம் நீங்கி விழித்தலைப் போன்றது...' என்பதாக அமையும்.
அது உண்மைதான். ஆனால் இந்த இரண்டு வரிகளுக்குள் எப்போதும் போல இந்த 'வார்த்தைச் சித்தர்' ஏழ் கடலுக்கும் ஒப்பான கருத்தியல்களை பொதித்து வைத்திருப்பார் என்பதுதான் ஆழ்ந்து அறிய வேண்டிய ஞானமாக மலர்கிறது.
ஒரு ஜீவ வாழ்வின் சரி பாதிக் காலங்கள் தூக்கத்தில் கடந்து போகிறது. உறக்கம் என்பது உண்மையில் ஒரு வரம். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறைவன் கொடுத்திருக்கும் கொடைதான் உறக்கம்.
இந்த உறக்கத்தில் உண்மையில் என்னதான் நிகழ்கிறது...?
பரமாத்ம சொரூபம் ஒரு ஜீவனின் பிறவிக்காக... அந்த ஜீவனின் மூலமான 'ஆத்மாவாகவும்'... அந்த 'ஆத்மாவை' உற்பத்தி ஸ்தானமாகக் கொண்டு 'ஜீவனும்'... அந்த ஜீவனை மூலமாகக் கொண்டு மனமும்... அந்த மனத்தை மூலமாகக் கொண்டு, அதன் வழியாக வெளிப்படும் அதன் 'கர்ம வினைகளை' அனுபவிக்கும் உடலும் திகழ்கிறது.
அந்த உடல்... தனது வினைகளை... கடலின் தொடர் அலைகளைப் போல தொடர்ந்து அனுபவித்துக் களைத்துப் போகும் போது, அதனை ஆசுவாசப்படுத்த... அந்த பரமாத்ம சொரூபம்... அந்த ஜீவனை ஒவ்வொரு நாளின் இறுதியிலும்... தனது 'ஆத்ம' சொரூபத்தில் இணைத்துக் கொள்கிறது.
அந்த ஜீவன் தனது வினைகளுக்கிடையேயான... ஒரு சில நொடிகளின் இடைவெளியில்... திகைத்து நிற்கும் வேளையை சாதகமாக்கிக் கொண்டு... அந்த ஜீவனை, தனக்குள் ஈர்த்து அணைத்துக் கொள்கிறது... கருணை கொண்டு நம்மோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் 'சாட்சியான' ஆத்மா. இந்த நிகழ்வுக்குத்தான்... 'உறக்கம்' என்று பெயர். 'எல்லாத் துன்பத்திற்கும் ஒரு விடிவு' உறக்கம்தான்.
அந்த அற்புத நிகழ்வுதான் இந்த ஜீவனின் வாழ்வின் இறுதியில் நிகழ வேண்டிய நிகழ்வு. இதுதான் ஜீவ வாழ்வின் நோக்கம். இதுதான் 'பேரின்பம்'. அதனால்தான், 'தூக்கத்தின் விழிப்பு' நமக்கு துன்பமாகவும்... 'ஆழ்ந்த உறக்கத்தின் அனுபவம்' நமக்கு பேரின்பமாகவும் அமைகிறது.
ஆனால்... ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இந்த பேரின்பத்தை அனுபவிக்கும் ஜீவன், மீண்டும் அடுத்த நாளில் அதனின்று வெளிப்பட்டு,,, மீண்டும் தனது 'கர்ம வினைகளை' தொடர்கிறது. இவ்வாறு... ஒவ்வொரு பிறவியிலும், தனது மூலமான... தோன்றாத நிலையில் இருக்கும் ஆத்ம பந்தத்தில் திளைக்கும் உபாயத்தை அறியாமல்... மீண்டும், மீண்டும் தொடர் பிறவிகளில் சிக்கித் தவிக்கும் ஜீவனின் நிலையைத்தான்... இந்தக் குறளில் பதிவு செய்கிறார்... இந்த 'வார்த்தைச் சித்தர்'.
ஒவ்வொரு பிறவியின் மறைவும்... மிண்டும் அடுத்த பிறவியின் பிறப்பும்தான் இந்த ஜீவனின் நீக்க முடியாத துன்பம். இந்தப் பிறவித் தொடரின் மூலம்தான், அந்த ஜீவன் சேர்த்து வைத்துள்ள 'கர்ம வினைகள்'. அதுதான், தொடர் பிறவிகளுக்குக் காரணமாகிறது.
இந்த தொடர் பிறவிகளை நிறுத்தவதன் சூட்சுமம்... அந்த ஜீவனின் 'உறக்கத்தில்தான்' இருக்கிறது. அந்த உறக்கம்... அந்த ஜீவனை, அதன் ஆத்மா சங்கமத்தில் கலக்க வைப்பதாக இருக்க வேண்டும். மீண்டும் அதனின்று பிரிந்து... ஒரு பிறப்பாக அமைந்து விடக் கூடாது... என்பதை வலியுறுத்தும் 'குறளாக' அமைவதுதான் இதன் சிறப்பும்... சூட்சுமமும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment