Thursday, October 31, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 25. காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 2.

ஜோதிடமும் அதன் சூட்ச்சுமங்களும் - பகுதி 25.

காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 2.




ஒரு ஜோதிடச் சித்தரத்தில்... 'காரகத்துவமும், ஆதிபத்தியமும்' எவ்வாறு அமைகிறது... என்பதை பார்க்கலாம்.

ஒரு இராசி சக்கரத்தில் 'லக்னத்தை' முதலாகக் கொண்டு அதை வடிவமைக்கிறோம். அது அந்த ஜீவனின் ஜனனத்தைக் குறிக்கும் இடமாகிறது. அது 'லக்ன பா(B)வமாகிறது'. அதிலிருந்து படிப்படியாக குடும்ப பாவம், சகோதர பாவம்... எனக் கடந்து மோக்ஷ பாவம் வரை நீடிக்கிறது.

இந்த பா(B)வங்களைத்தான்... 'காரகத்துவங்கள்' ஆளுமை செய்கின்றன.

உதாரணமாக... இரண்டாம் பாவமான... 'குடும்ப பாவத்தை', 'குரு பகவான்' ஆளுமை செய்கிறார். 'குடும்ப பாவம்' என்பது ஒரு ஜீவன்... தான் பிறந்த குடும்பத்திடமிருந்து அனுபவிக்கும் 'அனுபவங்களையும்... பெரும் 'பாக்கியங்களையும்'... தான் தன் குடும்பத்திற்கு அளிக்கும் 'பங்களிப்புகளையும்'... சுட்டிக் காட்டுகிறது.

இந்த இரண்டாம் பாவம்... அதன் 'ஸ்தானாதிபதியைக்' கொண்டே ஆட்சி செய்யப் படுகிறது. இந்த பாவத்திற்கு பொறுப்பேற்பவராக, 'குரு பகவான்' இருந்தாலும்... அந்த பொறுப்புகளை... இந்த ஜீவனின் பிறப்பின் 'கர்ம வினைச் சூழல்களுக்கு' ஏற்ப வழி நடத்துபவராக... அந்த ஸ்தானாதிபதி அமைகிறார். ஆகவே. அந்த ஸ்தானாதிபதியைத்தான்... 'ஆதிபத்தியத்திற்கு உரியவர்' என்று அழக்கிறோம்.

எனவே... இரண்டாம் பாவத்திற்கு 'குரு பகவான்' பாவாதிபதியாகி... 'காரகத்துவராக' அமைகிறார். அந்த 'ஸ்தானாதிபதி'... 'ஆதிபத்தியத்திற்கு உரியவராக' அமைகிறார்.

இந்த 'காரகத்துவத்தையும்... ஆதிபத்தியத்தையும்' கொண்டு ஒரு ஜாதகத்திற்கு பலனறிய முற்படும் போது... இதில் அமைந்திருக்கும் 'சூட்சுமங்களை' அறிந்து கொள்வது அவசியம்.

எண்ணற்ற சூட்சுமங்களை தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ள ஜோதிடக் கலையில்... இந்த காரகத்துவத்திற்கும்... ஆதிபத்தியங்களுக்குமான பலனறியும் சூட்சுமம் ஒன்றைப் பார்க்கலாம்...

சூட்சுமம் 1 : காரகத்துவத்திற்கான கிரகங்கள் அந்தந்த காரகத்தில் நிற்பது...                                     'காரகோப நாஸ்தியாவதற்கு' வழி வகுக்கும்.

உதரணமாக... இரண்டாம் பாவமான 'குடும்ப பாவத்தில்' குடும்பக்காரகரான 'குரு பகவான்' தனித்து அமையும் போது 'காரகோப நாஸ்தியாகிறார்'.

சூட்சுமம் 2 : ஆதிபத்தியங்கள், மாரகத்துவத்துக்கும்... பாதகத்துவத்துக்கும்                                        கட்டுப் பட்டவைகள்.

உதாரணமாக... 'ஸ்திர லக்னமான' மகர லக்னத்திற்கு... இரண்டாம் ஸ்தானமும்... ஏழாம் ஸ்தானமும்... 'இரு மாராகாதிபதிகளாகிறார்கள்'. அது போல பதினோராம் ஸ்தானம்... பாதக ஸ்தானமாகிறது.

இந்த சூட்சுமங்களைக் கொண்டு... உதாரண ஜாதக அமைவுகளின் மூலமாக... தொடர்ந்து ஆராய்வதற்கு முயற்சிப்போம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...