குரு தேடல் - பகுதி 3 :
'மிரா அல்பாசா'... தனது பதினான்காவது வயதில்... 'பிரான்ஸ் நாட்டில்' குடியேறிய சிறுமி. இவளது இளைமைப் பருவம்... பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் 'உலகக் கல்வியை'' நோக்கியதாக இல்லாமல்... வாழ்வின் உண்மையை நோக்கிய உள் கல்வித்' தேடலாகவே அமைந்தது.
இந்த உள்வாழ்வின் பயணத்திற்கு... ஒரு வழிகாட்டியைத் தேடி... இவரது பயணம்... இவரைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றது. இவ்வாறு ஒரு முறை... இவர் அல்ஜீரிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போதுதான்... தனது உள்ளுணர்வு... உலகத்தின் தென் புறமாக தன்னை இழுப்பதை உணர்ந்தார்.
ஒரு நாள் இரவு... தனது ஆழ்ந்த உறக்கத்தில்... முதன் முறையாக... 'ஸ்ரீ கிருஷ்ண பகவானைத்' தனது கனவில் காண்கிறார். குழந்தை வடிவினனாக... புன் சிரிப்புடன்... தன் இரு கைகளையும் நீட்டி... அரவணைப்பதைப் போலக் கண்டு... விழிக்கிறார். அந்தக் கனவின் உணர்வு... தன்னை ஒரு 'ஆழ்ந்த அமைதிக்கு' இட்டுச் செல்வதை உணர்ந்தார். இது அவரடைந்த முதல் அனுபவமாகும்.
அந்த அனுபவம்... அவரை, பிரான்சு தேசத்தின் ஆளுமையில் இருந்த... 'பாண்டிச்சேரிக்கு'... இழுத்து வந்தது.
பாண்டிச்சேரி மண்ணிலிருந்து தமது ஆன்ம வீச்சுகளை உலகெங்கும் பரப்பி வந்த ';அரவிந்தம்' என்ற காந்த மலர்... இந்த மிரா என்ற வண்டையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டது. 'பகவான் அரவிந்தரை' கண்டதுமே... பரவசமடைந்தார் மிரா. தான் கண்ட கனவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், தனக்கருளிய அதே ஆனந்த உணர்வினை... இந்த அற்புத மகானைக் கண்டதுமே பெற்றார்.
இவர்தான் தான் இது வரை தேடி வந்த 'சத்குரு'... என்பதை உணர்ந்து... அவரது திருவடி நிழலியே தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். பகவான் அரவிந்தர்... இந்த 'பேரன்பாளரை'... 'அன்னை' என்று அழைத்தார். பகவானின் பேரின்ப சமாதிக்குப் பின்... அவரின் பக்தர்கள்... சீடர்கள்... சாதனையாளர்கள்... அனைவருக்குமே... அன்னையானார்... இந்த மிரா.
ஸாய்ராம்.
'மிரா அல்பாசா'... தனது பதினான்காவது வயதில்... 'பிரான்ஸ் நாட்டில்' குடியேறிய சிறுமி. இவளது இளைமைப் பருவம்... பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் 'உலகக் கல்வியை'' நோக்கியதாக இல்லாமல்... வாழ்வின் உண்மையை நோக்கிய உள் கல்வித்' தேடலாகவே அமைந்தது.
இந்த உள்வாழ்வின் பயணத்திற்கு... ஒரு வழிகாட்டியைத் தேடி... இவரது பயணம்... இவரைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றது. இவ்வாறு ஒரு முறை... இவர் அல்ஜீரிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போதுதான்... தனது உள்ளுணர்வு... உலகத்தின் தென் புறமாக தன்னை இழுப்பதை உணர்ந்தார்.
ஒரு நாள் இரவு... தனது ஆழ்ந்த உறக்கத்தில்... முதன் முறையாக... 'ஸ்ரீ கிருஷ்ண பகவானைத்' தனது கனவில் காண்கிறார். குழந்தை வடிவினனாக... புன் சிரிப்புடன்... தன் இரு கைகளையும் நீட்டி... அரவணைப்பதைப் போலக் கண்டு... விழிக்கிறார். அந்தக் கனவின் உணர்வு... தன்னை ஒரு 'ஆழ்ந்த அமைதிக்கு' இட்டுச் செல்வதை உணர்ந்தார். இது அவரடைந்த முதல் அனுபவமாகும்.
அந்த அனுபவம்... அவரை, பிரான்சு தேசத்தின் ஆளுமையில் இருந்த... 'பாண்டிச்சேரிக்கு'... இழுத்து வந்தது.
பாண்டிச்சேரி மண்ணிலிருந்து தமது ஆன்ம வீச்சுகளை உலகெங்கும் பரப்பி வந்த ';அரவிந்தம்' என்ற காந்த மலர்... இந்த மிரா என்ற வண்டையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டது. 'பகவான் அரவிந்தரை' கண்டதுமே... பரவசமடைந்தார் மிரா. தான் கண்ட கனவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், தனக்கருளிய அதே ஆனந்த உணர்வினை... இந்த அற்புத மகானைக் கண்டதுமே பெற்றார்.
இவர்தான் தான் இது வரை தேடி வந்த 'சத்குரு'... என்பதை உணர்ந்து... அவரது திருவடி நிழலியே தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். பகவான் அரவிந்தர்... இந்த 'பேரன்பாளரை'... 'அன்னை' என்று அழைத்தார். பகவானின் பேரின்ப சமாதிக்குப் பின்... அவரின் பக்தர்கள்... சீடர்கள்... சாதனையாளர்கள்... அனைவருக்குமே... அன்னையானார்... இந்த மிரா.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment